img
img

இந்திய அணி அபார வெற்றி!
சனி 04 பிப்ரவரி 2017 13:18:45

img

இந்தியா-இங்கிலாந்து இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) அணிகளுக்கான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ராவ்லின்ஸ் 96 ரன்னும், பார்ட்லெட் 55 ரன்னும் எடுத்தனர்.இந்திய அணி தரப்பில் ராகுல் சாஹர் 4 விக்கெட்டும், அன்குல்ராய் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இதனை அடுத்து ஆடிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 138 ரன்னும், ஹர்விக் தேசாய் 37 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வென்று இருந்தன. இந்தியா-இங்கிலாந்து இளையோர் அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img