img
img

ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய அணிகளின் சவால்களை எதிர்கொள்வோம்  
வெள்ளி 27 அக்டோபர் 2017 14:21:04

img

கோலாலம்பூர், 

ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய அணிகளின் சவால்களை எதிர்கொள்ள இறுதிவரை போராடுவோம் என்று தேசிய இளம் ஆட்டக்காரர் என். தனபாலன் நேற்று கூறினார். 23 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான ஏஎப்சி கிண்ண கால்பந்துப் போட்டி வரும் ஜனவரி மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்காக குலுக்கல் அண்மையில் நடைபெற்றது. இதில் சி பிரிவில் மலேசிய அணியினர் இடம் பிடித்துள்ளனர்.அப்பிரிவில் ஈராக், ஜோர்டான், சவூதி அரேபியா ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.இவ்வணிகளில் சவால்களை எதிர்கொள்ள டத்தோ ஓங் கிம் சுவீ தலைமையிலான தேசிய அணியினர் இப்போதே பயிற்சிகளை தொடங்கி விட்டனர்.

மலேசியாவை காட்டிலும் இம்மூன்று அணிகளும் கால்பந்து விளையாட்டில் பலம் வாய்ந்த அணிகளாக விளங்குகின்றன. ஆகையால் இப்போட்டி கடுமையான சவால்களுக்கு மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வேளையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தேசிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் என். தனபாலன் இப்போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

Read More: Malaysia Nanban News Paper on 27.10.2017

 

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img