img
img

200 மீட்டர் ஓட்டத்தில் என் சாதனையை முறியடிக்க முடியுமா?
வெள்ளி 14 ஜூலை 2017 17:43:44

img

கோலாலம்பூர், 200 மீட்டர் ஓட்டப் போட்டியின் என் சாதனை நேரப் பதிவை முறியடிக்க முடி யுமா என்று பறக்கும் டாக்டர் டான்ஸ்ரீ எம். ஜெகதீசன் சீ போட்டியாளர்க ளுக்கு சவால் விடுத்துள்ளார்.தென்கிழக்காசிய நாடுகளுக்கான சீ விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோலாலம் பூரில் நடைபெறவுள்ளது. 405 விளையாட்டுகளை அடிப் படையாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்படவுள்ளது. 38 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் சீ விளையாட்டுப் போட்டியில் களமிறங்கவுள்ளனர்.இவ்வேளையில் சீ விளையாட்டுப் போட்டி குறித்து நாட்டின் முன்னாள் ஓட்டக்காரர் டான்ஸ்ரீ ஜெக தீசன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 1968ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நான் அப்போட்டியை 20.92 வினாடிகளில் முடித்து புதிய நேர சாதனையை பதிவு செய்தேன்.200 மீட்டர் ஓட்டப் போட்டியில் என்னுடையே நேரப் பதிவு சாதனை தான் இன்னமும் தேசிய சாதனையாக உள்ளது. சுமார் 49 ஆண்டுகளாக இச் சாதனைக்கு உரியவன் என்ற பெருமை யுடன் நான் வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இச்சாதனையை மலேசியாவின் இளம் ஓட்டக்காரர்கள் முறியடிக்க வேண்டும் என்பது என்னுடையாக மிகப் பெரிய விருப்பமாக உள்ளது. அவ்வகையில் அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டி தான் என்னு டைய சாதனையை முறியடிப் பதற்கான சிறந்த களமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன். ஆகவே சீ விளையாட்டுப் போட்டி யில் களமிறங்கும் மலேசிய போட் டியாளர்கள் என் சாத னையை முறியடிக்க முடியுமா என்ற சவாலை நேரடியாகவே இங்கு முன்வைக்கிறேன் என்று அவர் கூறினார். தேசிய பயிற்றுநர் முகமட் போட் முகமட் காசிம் தலைமையில் பயிற்சி பெற்று வரும் தேசிய ஓட்டக்காரர்கள் சீ போட்டியில் வெற்றிகளை குவிப் பதுடன் பல சாதனைகளை படைக்கும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றனர்.அதே வேளையில் ஓட்டப் பந்தயத்தில் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பை முறியடிக்கும் வல்லமையும் அவ்வீரர்களுக்கு உண்டு. மலேசிய ஓட்டக்காரர் களின் வளர்ச்சியை நான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். அவ்வகையில் ஓட்டப்பந்தயத்தில் நாட்டின் பெயரை மேலோங்க வைக்கும் சக்தி தேசிய வீரர்களுக்கு உண்டு என டான்ஸ்ரீ ஜெகதீசன் கூறினார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img