(த. மேத்தியூஸ்) பினாங்கு, மலேசிய பொது சிலம்பப் போட்டியில் பினாங்கு சிலம்ப போர்க்கலை குழுவினர் 9 தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.முதலாவது அனைத்துலக மலேசிய பொது சிலம்ப வெற்றியாளர் போட்டி செராஸ் பூப்பந்து அரங்கில் நடைபெற்றது. மலேசியாவை தவிர்த்து அனைத்துலக ரீதியில் இருந்தும் போட்டியாளர்கள் திரளாக இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களின் திறனை வெளிப்படுத் தினர். பினாங்கு மாநிலத்தை பிரதிநிதித்து 15 போட்டியாளர்களுடன் நிர்வாகி நிர்மல்ராஜ், முதலாவது பயிற்றுநர் கதிர்கேசன் ஆகியோர் கலந்து கொண் டனர். போட்டியில் பங்கேற்ற ஜூரு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த லோஷினி, கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த டர்வின் ராஜ், நிபோங் திபால் மெத டிஸ் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இரா. உருமிலா, ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த புகழ் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தனுஷ், துங்கு அப்துல் ரஹ்மான் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மதினிஸ்வரி, ஜாவி தோட்டத் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரான்சிஸ், பழனியாண்டி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தட்சயாணி ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர். ஒரே வெண் கலப் பதக்கத்தை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த கதிரவன் வென்றதாக பினாங்கு சிலம்ப போர்க்கலை சங்கத்தின் பயிற்றுநர் மாஸ்டர் கவிக் குமார் இரவிச்சந்திரன் கூறினார். இதனிடையே இப்போட்டியில் குறி வைத்த இலக்கின்படி மலேசிய சிலம்ப போர்க்கலை மன்றம் ஒட்டுமொத்த முதல் நிலையில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக மன்றத்தின் தலைவர் கிரேன்ட் மாஸ்டர் முரளிதரன் கூறினார்.
இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.
மேலும்கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்
மேலும்1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி
மேலும்