img
img

குழந்தைகளிடம் இணையம்! பெற்றோரே கவனம்!
வெள்ளி 31 மார்ச் 2017 19:12:03

img

‘முளைச்சு மூணு இலை விடலை… இந்த போண்ல எல்லாமே தெரியுது என் செல்லத்துக்கு ’ என வீடுகளில் அம்மாக்களும், அப்பாக்களும் தம் பிள்ளை யின் அறிவைக் கண்டு பெருமை அடைவதுண்டு. எனக்கு என்ன தெரியுது, எல்லாம் என் பையன் தான் ஏதாவது நோண்டியிருப்பான், என் பொண்ணுதான் ஃப்ரெண்டுக்கு மெசேஜ் அனுப்புவா இப்படி தனக்குத் தெரியவில்லை என்றாலும் தன் பிள்ளைகள் தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்கிறார்கள் என்று பெருமை கொள்ளும் பெற்றோர்களும் உண்டு. இணைய பயன்பாட்டில் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டியது, பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று எந்தப் புரிதலும் இல்லா மல் அதன் பின்னுள்ள ஆபத்தையும் அறியாமல், நுனிவிரலில் உலகம் என்று ஆனபிறகு நம் பிள்ளைகளை இவை இல்லாமலும் வளர்க்க முடியாது என நாமே நம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லலாமா?. மூன்றில் ஒரு குழந்தை இணைய மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்கிறது. நான்கில் ஒரு குழந்தை அதனுடைய 12 வது வயதில் பாலியல் சார்ந்த ஆபாச வீடியோக்களை இணையத்தில் பார்ப்பதை பழக்கமாகக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தைகள் இணையத்தில் சமூக வலைத்தளங்களில் முக மறியா நபருடன் நட்பாகி பிறகு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலான பெண் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை சமூக விரோதிகள் மார்ஃபிங் செய்து அந்த குழந்தைகள் பிளாக்மெயில் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்டர்நெட் மூலமாக குழந்தைகள் மற்றும் பெண்களை மிரட்டும் சைபர் புல்லிங், குழந்தைகள் மற்றும் பெண்களுடைய சமூக வலைத்தளங்களில் இருந்து புகைப்படங்களை திருடி ஆன்லைன் மூலம் அவற்றை ஏலம் விடுவது, ஆபாச காட்சிகளை குழந்தைகளுக்கு அனுப்புவது, போர்னோ வீடியோக்களில் குழந்தைகள் மற்றும் பெண்களை ஈடுபடுத்துவது, குறப்பிட்ட நபருடைய சமூக வலைத்தள கணக்கை ஹேக் செய்து அதில் சமூக விரோத கருத்துகளை பதிவிடுவது அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பல குற்றங்கள் மூலம் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இணையத்தில் அவதூறு பரப்புவதால் உளவியல் சிக்கலுக்கு ஆளாகுவதை பலர் கணக்கில் கொள்வதே கிடையாது. புகார் அளித்தாலும் பெரிய அளவில் அவதூறு பரப்பியவர் மீது குற்ற நடவடிக்கையும் எடுப்பதில்லை.இணைய குற்றங்களுக்காக தண்டனைக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் பல தற்கொலைகள் இதுவர் நடந்தும் விட்டன. காதலர்களிடையே வரும் பிரச்சினைகளில் காதலை விட்டு வெளியேறும் பெண்களுக்கு, அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், மின்னஞ்சல்களை முகநூலில் பதிவிடுவேன் என்று ஆண்கள் மிரட்டல் விடுப்பது தற்போது அதிகரிக்கிறது. இதனை எதிர்கொள்ளத் தெரியாமலும், முகநூலில் மார்ஃபிங் செய்து தன்னுடைய புகைப்படம் வந்தவுடன் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று எண்ணுவதும்தான் தொடர் தற்கொலைகள் அரங்கேற காரணமாகிறது.இப்படியான பிரச்னையை எதிர்கொண்டு வெளியேறினால் நாளை இது போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்போம் என்பதை பெண்கள் உணர வேண்டும். குழந்தைகளிடம் இவ்வாறான புகைப்படங்கள் வெளியாகும் போது உடல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.இது தன்னுடைய தவறில்லை என் பதையும், இதனை செய்தவரே வெட்கி தலை குனிய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு புரியவைப்பது அவசியம். தொழில்நுட்பங்கள் புதிது புதிதாக வருவதும் அதற்கேற்ப நூதன குற்றங்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும். ஆனால் முறையான கண்காணிப்பும், தனி நபரின் இணைய பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வும்தான் இணையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் இணையத்தை பயன்படுத்துவது குறித்து விரிவாக உரையாட வேண்டும். உதாரணத்திற்கு ‘‘இன்னைக்கு நீ என்ன இன்டர்நெட்ல பார்த்த” என்று தினமும் கேட்கும் போது இணையத்தில் குழந்தையின் தேடல் எதை நோக்கி என்பது புலப்படும். குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அனைவருக்கும் இணையதளத்தின் தேவை அதிகரித்திருக்கிறது. குழந்தைகள் தங்கள் பாடம் சார்ந்த விளக்கங்களை பெற இணையத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் சமூக வலைத்தளங்களை உங்கள் குழந்தைகள் பயன்படுத்துவதை எந்த வயதில் அனுமதிக்க போகிறீர்கள் என்பதை பெற்றோர்களின் முடிவை பொறுத்தே அமையும். எவ்வளவு நேரம் உங்கள் குழந்தை இணையத்தை பயன்படுத்துகிறது என்பதை கவனிக்க வேண்டும். ஒரு நாளைக்கு இவ்வளவு மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பார்க்க வேண்டும் என்று வரையறுக்கலாம். அனைத்து Appகளையும் டவுன்லோட் செய்வதை அனுமதிக் காதீர்கள்.இ.வேலட் போன்று மின்னணு அல்லது இணைய பணப்பரிமாற்றம் நீங்கள் செய்யும் போது one time passwordஐ பயன்படுத்துவது நல்லது. நிரந்தர பாஸ்வேர்டு ஆபத்தானது. அது மட்டுமல்லாது உங்கள் குழந்தை ஆன்லைனில் ஷாப்பிங் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை காசு கொடுத்து வாங்க அது வழி வகுக்கும். ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு எக்காரணம் கொண்டும் உங்கள் குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். உங்கள் வீட்டு கம்ப்யூட்டர், டேப்லெட், செல்போன் அனைத்திலும் வன்முறையைத் தூண்டக் கூடிய அல்லது பாலியல் சார்ந்த ஆபாச தளங்களை முடக்கி வைக்கலாம். பிளாக் செய்து வைக்கலாம். வீட்டில் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது தனி அறையில் இல்லாமல் அனைவரும் இருக்குமிடமாக அல்லது நடுக் கூடத்தில் வைத்து பயன்படுத்துவது நல்லது. பெரும்பாலும் குழந்தைகள் இணையத்தை பயன்படுத்தும்போது கூடவே பெற்றோரும் நட்புடன் இணைந்து பயன்படுத்தும் அளவிற்கான பழக்கத்தை குடும்பத்தில் இளம் தலைமுறை பெற்றோர் கடைப்பிடிப்பதில் சிக்கல் இல்லை. குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் ஆபத்தில் சிக்கும்போது உடனடியாக பெற்றோரிடம் அதனை தெரிவிக்கும் வண்ணம் குழந்தைகளின் நம்பிக்கைக் குரியவர்களாக எது தொடர்பானதையும் பிள்ளைகள் மனம்விட்டு பெற்றோரிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை விதைப்பது அவசியம். உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களிலோ அல்லது இணையதளத்திலோ தவறாக பயன்படுத்தினால் உடனடியாக அந்த தளத்தை ஸ்கிரின்ஷாட் எடுங்கள். குறைந்தது அந்த இணையதளத்தை புகைப்படமாவது எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புகார் கொடுக்க உதவும். இரவு 9 மணிக்கு மேல் வீட்டில் வைஃப்பை பயன்படுத்துவதை பெரியோர்கள் தவிர்த்துவிட்டு குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பேசுவதை வழக்கமாக கொள்வது நல்லது. தாங்கள் இணையத்தில் பார்த்த, படித்த விஷயங்களை அவ்வப்போது பரிமாறிக்கொள்வதும் சிறப்பு. குழந்தைகளுக்கு இவற்றை சொல்லிக்கொடுங்கள். * இமெயில், பேஸ்புக், ட்விட்டர் என்று உங்கள் இணையதளத்தின் அனைத்து கணக்குகளுக்கும் வைக்கும் பாஸ்வேர்டை யாருக்கும் பகிராதீர்கள். * பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு குறியீடுகள் (@) போன்றவற்றை சேர்ப்பது நலம். பாஸ்வேர்டுகள் திருடப்படாமல் பாதுகாக்க இது உதவும். * தனக்கும் தன் குடும்பத்தினர் மட்டும் அறியக்கூடிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். * இணையத்தில் அவ்வப்போது உங்களது சொந்த தகவல்களை கேட்கும் தளங்களுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது. * உங்கள் சமூக வலைத்தளங்களில் allow, ok போன்று பட்டன்களை கிளிக் செய்வதற்கு முன்னால் எதற்காக உங்களிடம் அனுமதி கோருகிறார்கள் என்பதை அறிந்த பிறகே கிளிக் செய்யுங்கள். * உங்கள் பெற்றோர்கள் அல்லது உடன்பிறந்தவர்களின் பெயர்களை பாஸ்வேர்டாக வைக்காதீர்கள். எளிதில் உங்களது பாஸ்வேர்டை எதிரிகள் கண்டுபிடித்து விடுவார்கள். * புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் போது கூடுதல் கவனம் தேவை. * தாங்கள் செல்லும் இடங்களை உடனுக்குடன் பதிவிடுவதும் ஆபத்துதான். சொந்தக் கருத்துகளை பதிவிடும் போது அதிக கவனம் தேவை. உங்களுக்கு வந்த தகவலையும் அப்படியே பகிராமல் அதன் உண்மைத் தன்மை உணர்ந்து ஆராய்ந்து பிறகு பகிருங்கள்.

பின்செல்

தொழில்நுட்பம்

img
முதன்முதலில் விண்கல்லிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! - வெளியிட்டது ஜப்பான்

உள்ள ரயுகு என்ற விண்கல்லின்

மேலும்
img
ஐ-ஃபோன் யுசர்களே, இந்த அப்டேட் வந்துவிட்டதா..?

முதலில் ஐ-ஃபோன் சீரியஸ்களில் எதுவெல்லாம்

மேலும்
img
`7 நிமிடம் 1 மணி நேரமானது' - விரைவில் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்

ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் பீட்டா

மேலும்
img
உடலையும் மனதையும் பாதிக்கும் செல்போன் அடிக்‌ஷன்... கவனம்!

இன்றோ பேசுவதற்கு மட்டுமின்றி, பல வகைகளில்

மேலும்
img
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்

அறிவியல் சாதனை:

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img