img
img

ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!
சனி 11 மார்ச் 2017 13:07:21

img

பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பிலிப் டமாயன் த/பெ மாணிக்கம் (வயது 15) நீரில் மூழ்கினார். இத்துயரச் சம்பவம் நேற்றுக் காலை 11.40 மணியளவில் கம்போங் சங்லாங் அருகே சுங்கை கிரியான் ஆற்றில் நிகழ்ந்தது. சம்பவத்தின் போது மேலும் 3 நண்பர்களுடன் இப் பகுதியிலுள்ள ஓய்வெடுக்கும் பகுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரம் சென்று குளிப்பதற்கு ஆற்றில் இறங்கிய போது நீரினால் அடித்துச் செல்லப்பட்டார். உதவி கேட்டு கூச்சலிட்ட போது ஓடி வந்த சக நண்பர்கள் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்ற முற்பட்ட போது இயலாமல் போனதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த நிபோங் திபால் தீயணைப்பு, மீட்புப் படையினர், பொது தற்காப்புப் படையினர், முக்குளிப்புப் படையினர் தேடும் நடவடிக்கையை மேற்கொண்டும் மாலை 7 மணி வரையில் எந்தவொரு அடையாளமும் கிடைக்க வில்லை. தேடும் பணியும் தொடர்கின்றது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img