img
img

போலீசில் பொய் புகார்!
வியாழன் 09 மார்ச் 2017 13:20:39

img

போலீசில் பொய்ப் புகார் கொடுத்ததாக இரு இந்தியப் பெண்கள் உட்பட ஐவருக்கு நேற்று இங்குள்ள கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1,000 வெள்ளி முதல் 1,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை செனாய் மற்றும் கூலாய் வட்டாரத்தில் தங்களிடம் வழிப்பறித் திருடர்கள் கத்தியைக்காட்டி கொள்ளையிட்டதாக கூலாய், செனாய் போலீஸ் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத் ததாக சி.ராஜேஸ் வரி (வயது 27), சி.திலகம் (வயது 32), லம் ஜுன் ஹுவா (வயது 23), அன் ஞாய் பந்திங் (வயது 28), முகமட் இமான் சிக்ரி அப்துல்லா (வயது 20) ஆகிய ஐவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டது. தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஐவரும் மாஜிஸ்திரேட் அமாட் பாரிட் அமாட் கமால் முன்னிலையில் ஒப்புக் கொண்டனர்.பொய்ப் புகாரை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்ட சி.ராஜேஸ்வரி மற்றும் சி.திலகம் ஆகிய இருவருக்கு தலா 1500 வெள்ளி அபராதமும், ஜுன் ஹுவா, அன்ஞாய் பந்திங், முகமட் இமான் சிக்ரி ஆகிய மூவருக்கு தலா ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் அமாட் பாரிட் அமாட் கமால் தீர்ப்பளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img