img
img

பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள்ளவிருந்த 7 பேர் அதிரடி கைது!
திங்கள் 06 மார்ச் 2017 14:06:30

img

பயங்கரவாத கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஏழு ஆடவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.பிப்ரவரி 21லிருந்து 26ஆம் தேதிவரையில் சிலாங்கூர் சுற்றுப்புறம், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட நட வடிக்கையின்போது இவர்கள் கைதாகினர். கைதாகிய சந்தேக பேர்வழிகள் 28க்கும் 41 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவர் உள்நாட்டு பிரஜை. ஒருவர் இந்தோனேசியர். இன்னொருவர் கிழக்காசிய பிரஜை. மற்ற நால்வர் ஏமன் நாட்டு பிரஜைகள். டாய்ஸ் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் உள்நாட்டவர் ஒருவர், இந்தோனேசிய பிரஜை ஒருவர் கடந்த பிப்ரவரி 21இல் கெப்போங்கில் கைதாகியதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித் தார். கிழக்காசியாவைச் சேர்ந்த பிரஜையான மூன்றாவது சந்தேகப்பேர்வழி கடந்த பிப்ரவரி 23இல் பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார். ஏமன் நாட்டு பிரஜையான நான்கு சந்தேகப் பேர்வழிகள் கடந்த பிப்ரவரி 26இல் செர்டாங் கிலும் சைபர் ஜெயாவிலும் கைது செய்யப்பட்டனர். ஏமன் நாட்டு புரட்சிக் கும்பலைச் சேர்ந்த வர்கள் இவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்றனர் என்று டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img