நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தலில் 60 விழுக்காட்டு புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தப்போவதாக ம.இ.கா. அறிவித்துள்ளது. புதுமுகங்களில் இளைஞர்கள், மகளிர் பிரதிநிதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளும் அடங்குவர் என்று கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறுகிறார். அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை உறுதிப் படுத்துவதற்காக தாங்கள் இந்த மாற் றங்களை செய்திருப் பதாகவும், குறிப்பாக கெடா, பினாங்கு, பேரா, சிலாங்கூர் மாநிலங்களில் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஆயர் குரோவில் ம.இ.கா. தாமான் முசாபார் ஷா ஏற்பாடு செய்திருந்த கல்வி, சமூகத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தப் பிறகு அவர் நிருபர்களிடம் பேசினார். புக்கிட் கட்டில் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அலி ருஸ்தாம், ம.இ.கா. மாநில தலைவர் டத்தோ எம்.எஸ். மகாதேவன் ஆகியோரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்