சிலாங்கூர் போலீஸ் தலைமையகத்தின் உளவுத் துறை (ஸ்பெஷல் பிராஞ்ச்) அதிகாரி ஒருவர், டாமன்சாரா அருகே புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ் சாலையின் (என்கேவிகே) 18.1 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். சர்ஜண்ட் மேஜர் சுவிண்டர் சிங் இண்டுர் சிங் (வயது 52) ஓட்டிச் சென்ற டொயோட்டா கேம்ரி ரக கார் சனிக் கிழமை அதிகாலை 6.24 மணியளவில் ஒரு தடை வேலியை மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தர். இந்த சம்பவத்தை உறுதிப் படுத்திய பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி முகமட் ஸானி சே டின், சர்ஜண்ட் மேஜர் சுவிண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறினார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மலாயா பல்கலைக் கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்