img
img

சொத்து ஊழல் வழக்கு! நால்வருக்கு காவல் நீட்டிப்பு
சனி 04 மார்ச் 2017 14:55:42

img

சொத்து ஊழல் வழக்கில் தடுக்கப்பட்ட அறுவரில் இரு மேம்பாட்டாளர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்ட வேளையில் நால்வரிடம் தொடர்ந்து விசார ணை மேற்கொள்வதற்காக இம்மாதம் 9ஆம் தேதி வரை தடுத்து வைக்க ஜொகூர்பாரு நீதிமன்ற மூத்த பதிவாளர் ஹபிசா ஜொஹார் அரிப் ஜொஹோர் லஞ்ச ஒழிப்பு ஆணை யத்திற்கு அனுமதி வழங்கினார். மேம்பாட்டாளர்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரி கள் விசாரணை மேற்கொண்ட பின் பிணையில் விடுவிக்க அனுமதித்ததாக தெரிவிக்கப் பட்டது. முன்னதாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பலமில்லியன் வெள்ளி சொத்து மோசடி தொடர் பில் ஆறு பேர் விசார ணைக்காக தடுக்கப்பட்டனர். அதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவரின் மகனும் ஆட்சிக் குழு உறுப்பி னரின் சிறப்பு அதிகாரியும் அடங் குவார். 2009ஆம் ஆண்டு மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைய சட்டம் பிரிவு 17(எ)யின் கீழ் விசாரணை மேற்கொள்ளும் வகையில் அவர்கள் தடுக்கப்பட் டுள்ளனர். முன்னதாக ஐவர் லஞ்ச ஒழிப்பு ஆணைய தடுப்பு சட்டைகளை அணிந்திருந்தவாறு ஆறு வாகனங்களில் 20 லஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளின் பாது காப்புடன் காலை 9.00 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர். ஒரு சந்தேக நபர் மட்டும் சாதாரண உடையில் காணப்பட்டார். காலை 11.15 மணியளவில் அவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை விட்டு பாதுகாப்புடன் வெளியேறினர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img