அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிகாமட் மாவட்டமே அதிக அளவில் பாதிக்கப்பட்ட வேளையில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழைகாரணமாக அம்மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை கொண்ட சில இடங்களில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 1 மணி யளவில் மொத்தம் நான்கு வெள்ள துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாநில சுகாதார, சுற்றுச் சூழலுக்கான ஆட்சிக்குழு உறுப் பினர் டத்தோ ஆயுப் ரஹ்மாட் அந்த மையங்களில் 41 பேர் தங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து மழை பெய்வதால் சுங்கை சிகாமட், சுங்கை பூலோகாசாப்பின் நீரின் அளவு உயர்ந்து வருவதை காண முடிவதாக தெரிவித்த அவர், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தற்போதைய வெள்ள காலத்தில் பிள்ளைகளை ஆபத்தான இடங்களில் விளையாட அனுமதிக்க வேண்டாம் எனவும் பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்