நேற்று மாலை 4 மணியளவில் வடக்கை நோக்கிய வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 43 ஆவது கிலோ மீட்டரில் எரிவாயு தோம்புகளை ஏற்றிச் சென்ற லோரி பிஎம்டபள்யூ வாகனம் மோதி குடைசாய்ந்த சம்பவத்தில் லோரியிலிருந்த எரிவாயு தோம்புகள் சாலையில் சிதறின. செடினாக்கிற்கும் சிம்பாங் ரெங்கத்திற்கும் இடையில் நடந்த அந்த விபத்தில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் மற்றொருவர் காயமின்றி தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிம்பாங் ரெங்கம் தீயணைப்பு, மீட்புத் துறையினர் எரிவாயு தோம்புகளிலிருந்து எரிவாயு வெளியேறாமல் இருப் பதை உறுதி செய்தனர். அந்த விபத்தால் நேற்று மாலை வரை அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வேளையில் விபத்து குறித்த தகவலை இரவு 7 மணிவரை போலீசார் வெளியிடவில்லை.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்