மூன்று நாட்களுக்கு தொடரப்பட்ட ஓப்ஸ் லெஜாங் சோதனை நடவடிக்கையில் 14 வயதுடைய மாணவர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள் ளனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 14 முதல் 30 வயதுடைய ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து வெ.1 லட்சம் மதிப்பிலான 4 கார்களும் 8 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பாசிர் பூத்தே மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரோசாக் முகமட் தெரி வித்தார். கைப்பற்றப்பட்ட கார்களின் இயந்திர எண்களும் ஜேசிஸ் எண்களும் மாற்றப்பட்டுள்ளதையும் அவர் உறுதி செய்தார். இந்த வட்டாரத்தில் வாகனங்கள் கடத் தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மற்றவர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். முறையான பதிவின்றி செயல்படும் 30க்கும் மேற்பட்ட கார் பட்டறைகளிலும் போலீசார் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அப்துல் ரோசாக் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்