img
img

நெகிழிப்பைக்கு 20 காசு சமூக நற்பணித் திட்டமாம்!
வெள்ளி 03 மார்ச் 2017 14:45:30

img

சிலாங்கூரில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை முழுமையாக அழிக்கும் நோக்கில் தான் 20 காசு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் எலிசபெத் வோங் நேற்று கூறினார். நெகிழிப் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு யார் பைக்குள் செல்கிறது எனும் தலைப்பில் மலேசிய நண்பன் மார்ச் 1ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்திக்கு மாநில அரசாங்கம் விளக்கமளிக்கும் வகையில் எலிசபெத் வோங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வகையில் அவர் கூறி யிருப்பது பின்வருமாறு, ஆரம்ப காலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்படியே வாடிக் கையாளர்கள் நெகிழிப் பைகள் வேண்டும் என்று கேட்டால் அதற்கு கடைக்காரர்கள் 20 காசு கட்டணம் விதிக்கலாம். இந்த நடைமுறை அமலுக்கு வந்ததுடன் சிலாங்கூர் வாழ் மக்கள் சனிக்கிழமை பொருட்களை வாங்கச் செல்லும் போது கைகளில் பைகளுடன் செல்வது கிட்டத்தட்ட வழக்கமாகி விட்டது.நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடைமுறையை தினசரி கொண்டுவரலாம் என்ற பலரின் உத்தேச கருத்துகளின் அடிப்படையில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து இப்புதிய நடைமுறையை மாநில அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இந்த நடைமுறைக்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் ஏற்படும் என்று அரசுக்கு தெரியும். ஆனால் கால ஓட்டத்தில் பொதுமக்கள் நெகிழிப் பைகளை பயன் படுத்துவதை தவிர்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு உண்டு என்று அவர் கூறினார். நெகிழிப் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் யார் பைக்குச் செல்கிறது என்ற கேள்வி எழும்பியுள்ளது. இக்காசு யாருடைய பைக்கும் செல்லவில்லை. மாறாக இக்கட்டணத்தின் வழி கிடைக்கும் பணத்தை மாநில அரசு சமூல நலத் திட்டங்கள் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்தார். மாநிலத்தில் உள்ள கடைகள், பேரங்காடிகள் உட்பட அனைத்து இடங்களிலும் அரசுப் பணியாளர்கள் அடிக்கடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். இவ்விடங்களில் நெகிழிப் பைகள் பயன்பாட்டில் இருந்தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் சிலாங்கூர் மாநிலத்தில் நெகிழிப் பைகளின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அதே வேளையில் நெகிழிப் பைகளுக்கு மாற்றுப் பைகள் வழங்கப்படா ததற்கான காரணம் என்னவென்றும் கேள்வி எழுந்துள்ளது. ‘ஓஎக்ஓ - பையோ டிக்ரேபல்’ எனப்படும் மக்கிப் போகும் தன்மையுடைய நெகிழிப் பைகள், காகித பைகள் ஆகியவை நெகிழிப் பைகளுக்கு மாற்றுப் பைகளாக இருக்காது என்பதை மாநில அரசு உறுதி செய்துள்ளது. இப்பைகளை உற்பத்தி செய்வதற்கும் அழிப்பதற்கும் பல சிக்கல்கள் உள்ளன. அதன் அடிப் படையில் நெகிழிப் பைகளுக்கு பதிலாக மக்களே உரிய பைகளுடன் கடைகளுக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் என்று எலிசபெத் வோங் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img