ஏழு வயது சிறுவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் வகையில் செயற்கை போதைப்பொருளைக் கொண்டு உணவுப் பொருட்கள் தயாரிக் கப்பட்டு வருவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி நேற்று அம்பலப்படுத்தினார். மிட்டாய் மற்றும் ரொட்டிகளில் இந்த வகை போதைப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் துடைத்தொழிப்பு நிறுவனம் கண்டு பிடித்திருப்பதை உள்துறை அமைச்சருமான அவர் சுட்டிக் காட்டினார். அந்த செயற்கை போதைப்பொருள் சேர்க்கப்பட்ட உணவை சாப்பிட்ட பின்னர் அச் சிறுவர்களின் நரம்பு, சிந்தனை, ரத்த ஓட்டம் ஆகியன பாதிக்கப்படும் என்று அவர் சொன்னார். மலேசிய இஸ்லாமிய பயிற்சி கழகத்தில் இஸ்லாமிய ஆலோசனை மன்றத்தின் கல்வி, சமூக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற் றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளையோர்களிடையே ஒழுக்கக்கேடு அதிகரித்து வருவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய அவர், இதனை சமாளிக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவும் எண்ணம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்