கொலையுண்ட வடகொரி யர் கிம் ஜோங் நாமின் உடலை அவரின் நெருங்கிய உறவினர் மட்டுமே உரிமை கோர முடியும் என அரச மலேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் வலியுறுத் தியுள்ளார். ஜோங் நாமின் உடல் கோலாலம்பூர் மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. ஜோங் நாமின் நெருங்கிய உற வினர் அம் மருத்துவமனையில் தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத் தின் டிஎன்ஏ (மரபணு) சோதனைக்கு உட்படுத் தப்படுவார். அம்மரபணு மாதிரி உறுதி செய்யப்பட்ட பிறகே ஜோங் நாமின் உடல் சம்பந்தப்பட்டவரி டம் ஒப்படைக் கப்படும். அவ்வுடலைத் தருமாறு வடகொரியத் தூதரகம் தூதுக்குழு உள்ளிட்ட எத்தரப்பின் வேண்டு கோளையும் போலீஸ் ஏற்காது. ஏனெனில் இறந்தவரின் உடலைக் கோருவது தொடர்பில் மலேசியா பொதுசெயல் நடை முறையைக் கொண்டுள்ளது என காலிட் கூறியுள்ளார். வடகொரியத் தலை வர் கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதர ரான ஜோங் - நாமின் உடலைப் பெறும் வகையில் வட கொரியா மலேசியாவுக்கு தூதுக் குழுவொன்றை அனுப்பியுள்ளது. அது தொடர்பில் பன் னாட்டு ஊடக அறிக்கை குறித்து கருத் துரைத்த காலிட் மேற்கண்ட வாறு கூறியுள்ளார். அவ்வழக்கில் ஐயுறப்படும் எழுவரை தேடும் பணி எந் தளவில் உள்ளது எனக் கேட்ட தற்கு, புலனாய்வில் உத வும் வகையில் அந்த எழுவரைத் தேடும் நடவடிக் கையை போலீசார் தொடர்ந்து மேற்கொள் வார்கள் என்று காலிட் கூறியுள் ளார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்