சுற்று வட்டாரத்தில் வீடு புகுந்து திருடும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கேங் பியான் ஜோனைச் சேர்ந்த அறுவரை போலீசார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் 24 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த கும்பலின் தலைவனும் போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கை யில் சிக்கி உள்ளதாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் படையின் துணைத் தலைவர் சுபியான் சுலைமான் தெரிவித்தார். கோலா இபாய், கோல திரங்கானு ஆகிய இடங்களில் நடந்த 6 வீடு புகுந்து திருடும் சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த கும்பல் ஆள் இல்லாத வீடுகளைக் கண்டறிந்து இரவு நேரங்களில் தங்களின் கைவரிசையை காட்டி வந்துள்ளது. இந்த கைது நடவடிக்கையின் மூலம் இவர்கள் திருடிய பலவகை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மடிக்கணினி, தொலைக்காட்சி, கைப்பை போன்ற பொருட்கள் இதில் அடங்கும். வீடுகளை உடைக்க இவர்கள் பயன்படுத்திய கருவிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் மேல் விசாரணை தொடரும் என பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் சுபியான் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்