img
img

நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தியில் பாதிப்பு: தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடி�
வெள்ளி 08 மே 2015 00:00:00

img
தமிழ்நாட்டின் வல்லூரில் இருக்கும் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து கொண்டுவர போதுமான ரயில் பெட்டிகள் இல்லாததால், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஒரிசாவில் இருக்கும் தால்ச்சர் நிலக்கரி சுரங்கத்திலிருந்துதான் வல்லூருக்கு நிலக்கரி கொண்டுவரப்படுகிறது என்றும், ஆனால் போதுமான நிலக்கரி சரக்குப் பெட்டிகள் இல்லாத காரணத்தால் போதுமான நிலக்கரி மின் நிலையத்திற்குக் கிடைப்பதில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதன் காரணமாக, அங்கிருக்கும் மூன்று மின் நிலையங்களில் ஒன்றில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திற்குக் கூடுதலாக நிலக்கரியை கொண்டுவர போதுமான சரக்குப்பெட்டிகளை ஒதுக்கீடு செய்யும்படி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அவர் கோரியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. கோடை காலத்தில் 2 ஆயிரம் மெகா வாட் வரை மின் பற்றாக்குறை ஏற்படுகிறது.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img