மீன் பிடித்து வீடு திரும்பிய இளைஞர் எருமை மாடுகளால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இங்குள்ள ஜாலான் தோக் கா - ஜெராங்காவ் பகுதியில் நிகழ்ந்துள்ளது. நண்பர்களுடன் மீன் பிடித்து விட்டு முகமட் ஜூல்கிப்ளி அயூப் (27) மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அவ ருடைய நண்பர்கள் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர். திடீரென்று சாலையோரத் தில் உள்ள புதரிலிருந்து வெளியாகிய எருமை மாடுகளால் சூழப்பட்ட ஜூல்கிப்ளி கடுமையாகத் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவரின் நண்பரும் சம் பவத்தை நேரில் பார்த்தவருமான கைருல் அன்வார் ஹசான் தெரிவித்தார். எருமை மாடு களால் சூழப்பட்ட ஜூல்கிப்ளி தன்னை நோக்கி கை காட்டியதாகவும் தானும் எருமை மாடுகளால் தாக்கப் படவிருந்து நூலி ழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்