உரிமம் இல்லாமல் துப்பாக் கியும் குண்டுகளையும் வைத்திருந்த குற்றத்திற்காக 32 வயதுமிக்க மெக்கானிக் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.சிறப்பு ஓப்ஸ் சந்தாஸை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்ட இந்தச் சோதனையில் இங்குள்ள கம்போங் சீசிக் லந்தாய், கோல கெட்டிலில் உள்ள அவரது வீட்டில் துப் பாக்கியும் குண் டுகள் கண்டெடுக்கப்பட்டன. வீட்டிற்கு வெளியே கல்லின் இடுக்கில் துப்பாக்கியும் குண்டுகளும் நெகிழி மற்றும் துணியால் சுற்றப்பட்ட பொட்டலத்தில் இருந்ததாகக் கெடா தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ அஸ்ரி யூசோப் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் மீது போதைப்பொருள் தொடர் பான குற்றமும் இதற்கு முன்பு பதிவு செய்யப் பட்டுள்ளது. தற்போது அவர் துருப்பிடித்திருந்த துப்பாக்கியையும் குண்டுகளையும் வைத்திருந்ததன் நோக்கமே ஆராயப்பட்டு வருவதாகவும் விசாரணையின் பொருட்டு வரும் செவ்வாய் வரை கைது செய்யப்பட்ட ஆடவர் காவலில் தடு த்து வைக்கப்பட்டுள்ளத ாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்