img
img

கொத்தடிமைகளாக்கப்பட்ட இந்திய சிறார்கள்.
திங்கள் 27 பிப்ரவரி 2017 12:53:16

img

பெங்காலான் உலு கம்போங் தாசேக் பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்ப ட்டிருந்த ஐந்து இந்திய சிறார்கள் உட்பட 18 பேரை பேரா போலீசார் மீட்டுள்ள வேளையில் இதற்கு காரண மான வர்கள் என்று சந்தேகிக்கப்படும் இந்திய தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பேரா குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் டத்தோ கான் தியான் கீ கூறினார். பொது மக்கள் கொடுத்த புகார் அடிப்படையில் பேரா போலீஸ் படையின் டி7 பிரிவு மேற்கொண்ட புலன் விசார ணையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறினார். நேற்று அதிகாலையில் சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்தின் வீட்டில் புகுந்து அதிரடி சோதனை மேற் கொண்டதில் மொத்தம் 18 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று கூறினார். 27 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட 11 இந்திய ஆடவர்களும், பெண்களும் மீட்கப்பட்டனர். 13 வய துக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இரண்டு இளைஞர்கள், 2 வயதுக்கும் 7 வயதுக்கும் இடைப்பட்ட இந்திய சிறுவர்கள் இந்த அதிரடி சோதனையில் மீட்கப்பட்டனர் என்று கூறினார். சம்பந்தப்பட்ட செம்பனைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு கொத்தடிமைகளைப் போல் நடத்தப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்ததாக கூறினார். மீட்கப்பட்ட இவர்களில் ஒருவர் எங்களுக்கு சம்பளம் எதுவும் கொடுப்பதில்லை. சம்பளம் கேட்டால் அடிக்கிறார்கள் சிறுவர்களும் வேலை செய்ய மிரட்டப்படு கின்றனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் ஆள் கடத்தல் சிறார்கள் விற்பனை குற் றச்சாட்டின் அடிப்படையில் 44 வயது 27 வயது கொண்ட இந்திய தம்பதியர் இருவரை போலீசார் மேல் விசா ரணைக்காக தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் லோரி, கார், அடையாள அட்டைகள், குறிப்பு புத்தகம், வர்த்தக லைசென்ஸ், பிறப்புப் பத்திரம், தற்காலிக அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் ஜொகூர், நெகிரி செம்பிலான் பகு தியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பாதுகாப்பு இல்லங்களில் தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். போலீசார் தங்களின் புலன் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img