img
img

தமிழ் அழிவதை தாங்க முடியாத உள்ளங்களின் அரிய முயற்சிகள்!
ஞாயிறு 26 பிப்ரவரி 2017 13:18:04

img

தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்காக நடத்தப்படும் அறிவியல் விழா குறித்து ஆசிரியர் களிடையே அலட்சியப் போக்கு இருக்கக்கூடாது என்று அதன் ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று சாடினர். அஸ்தியின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி ரீதியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில ரீதியிலும் அதன் பின்னர் தேசிய ரீதியிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். தமிழ்ப்பள்ளிகளில் இந்த அறிவியல் விழா தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதால் நமது மாணவர்கள் தற்போது அனைத்துலக ரீதியில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அம்மாணவர்களின் சாதனைகள் குறித்து அடிக்கடி பத்திரிகைகள், வானொலி என அனைத்திலும் வெளியாகுகின்றன. இருந்த போதிலும் இந்த அறிவியல் விழாவிற்கு மாணவர்களை அனுப்பி வைப்பதில் ஒரு சில பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் அலட்சியம் காட்டிதான் வருகின்றனர். சிலாங்கூரில் 95 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அதே போன்று கோலாலம்பூரில் 15 பள்ளிகள் உள்ளன. இவ்விரு மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர் களால் நடத்தப்பட்ட அறிவியல் விழா தொடர்பான விளக்கக் கூட்டத்தில் 73 பள்ளிகளை பிரதிநிதித்து மட்டுமே ஆசிரியர் கள் கலந்து கொண்டனர். இதர பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது கேள்வி குறி தான் என அவ்விரு மாநிலங் களின் அறிவியல் விழா ஏற்பாட்டு இயக்கமான பேரின்பம் மலேசியா வின் தலைமை செயலாளர் எஸ். குபேரன் கூறினார். அறிவியல் விழாவின் தலைமை நீதிபதி ராஜேஷ் இந்நிகழ்வில் ஆசிரியர் களுக்கு அறிவியல் விழா குறித்த அனைத்து விளக்கங்களை தந் தார். அதே வேளையில் பள்ளியில் நடத்தப்படும் போட்டியாளர் களுக்கான பரிசுகளும் முன் கூட்டியே வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நடத்தப்படும் இந் நிகழ்வை ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பது எங்களை போன்ற ஏற்பாட்டா ளர்களுக்கு பெரிய ஏமாற் றத்தை அளிக்கிறது. ஆகவே கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இரு மாநிலங் களில் இருந்து அனைத்து பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று குபேரன் கேட்டுக் கொண்டார். இதனிடையே அறிவியல் விழா தொடர்பான சிறப்பு கருத்தரங்கின் விழா ஒருங்கிணைப்பாளர் செல்வேந் திரன், சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயராமன், உதவித் தலைவர் நித்யானந்தன், மகளிர் பிரிவுத் தலைவி மல்லிகா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு: விவேகம் விதைத்த தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/18

தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய

மேலும்
img
பிடி 3 தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி: மயில்வண்ணன் 9ஏ பெற்று சாதனை!

பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று

மேலும்
img
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு : வெற்றிக்கு வித்திட்ட தமிழ்ப்பள்ளி ஆண்டு 5/16

பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்

மேலும்
img
டெக் டெரெய்ன் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா - 400 திவெட் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவாதம்

டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற

மேலும்
img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img