ராணுவ வீரர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காருடன் விபத்துக்குள்ளானதில் அவர் சிகிச்சை பயனளிக்காமல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இவ்விபத்து நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் லயாங் குளுவாங் தேக் வா எங் சாலையின் 6.5ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்துள்ளது. பலத்த காயங்களுக்கு ஆளான பட்ரூல் ஹிஷாம் (வயது 34) சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சை பயனளிக்காமல் அவர் பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது லகாம் தெரிவித்தார். இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட காரின் ஓட்டுநர் மு.ரகுராமன் (வயது 43) எந்தவித காயமின்றி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து ரகுராமனிடம் விசாரணை மேற்கொள்ள வுள்ளதாக முகமது லகாம் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்