பண்டார் பாரு பெர்மாய் ஜெயா குடியிருப்பில் வீடு புகுந்து கொள்ளையிட்ட இருவரை போலீசார் கைது செய்துள் ளனர். போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் இந்த கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 4 மணிநேரத்தில் 19,26 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்விருவரையும் கைது செய்தபோது கொள்ளையிட்ட பொருட்களில் சில அவர்களிடம் இருந்ததாகவும் மீரி மாவட்ட போலீஸ் தலைவர் கூ லெங் ஹுவாட் தெரிவித்தார். கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர், வீட் டிலிருந்து வெ.10 ஆயிரம் மதிப்புடைய சம்சோங் தொலைக்காட்சி, நகைகள், உடைகள், கைக்கடிகாரம், ரொக் கம் ஆகியவை திருடுபோனதாக போலீசில் புகார் செய்தார். வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உரவினரின் இறுதிச் சடங்களில் கலந்துகொள்ள சென்ற நேரத்தில் கொள்ளை யர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்களும் மேல் விசா ரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூ லெங் ஹுவாட் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்