கொள்ளை போதைப் பொருள் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கறுப்பு கும்பலைச் சேர்ந்த ஐவரை கோத்தா கினபாலு போலீஸ்படை யினர் கைது செய்தனர்.சபாவில் இக்கறுப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் கொள்ளை, கார் திருட்டு, போதைப் பொருள் விற் பனை உட்பட பல குற்றச் சம் பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இக்கும்பலை முறியடிக்கும் நோக்கில் கோத்தா கினபாலு போலீஸ்படையினர் பல மாதங்களாக நடவடிக் கைகளை மேற்கொண்டு வந்தனர் என்று அதன் துணை போலீஸ்படைத் தலைவர் எம். சந்திரா கூறினார். இக்கறுப்பு கும்பலின் தலை வனை (வயது 25) போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து காரில் தப்பியோட முயன்ற 37 வயதுடைய ஆடவன் ஒருவ னையும் போலீசார் கைது செய் தனர். கோத்தா மரூடூ மாவட்டத்தில் 27 வயதுடைய பாதுகாவலர் ஒருவர், துவாரான் மாவட்டத்தில் மேலும் இருவர் என போலீசார் மொத்தம் 5 பேரை கைது செய்தனர் என சந்திரா செய்தி யாளர்களிடம் கூறினார். கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு நிகழ்ந்த 11 கொள்ளைச் சம்பவங்கள், இர ண்டு சண்டை சம்பவங்கள், ஒரு கார் திருட்டு, 14 வீடுகளில் கொள் ளையடித்தது ஆகிய சம்பவங்க ளுக்காக இக்கும்பலை சேர்ந்த வர்கள் தேடப்பட்டு வந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்