வடக்கு தெற்கு நெடுஞ் சாலையின் 257.7ஆவது கிலோ மீட்டரில் மெனோரா சுரங்கப் பாதை அருகே விரை பேருந்து டிரேலர் லாரியை மோதியதில் 5 பய ணிகள் படுகாயமடைந்தனர் மேலும் 14 பயணிகள் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர். நேற்று அதிகாலை 2.15 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தின்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னாள் சென்று கொண்டிருந்த பேரு ந்தை மோதி யதாக நம்பப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், பேருந்திலிருந்து காயமடைந்த பயணி களை மீட்டனர். இச்சம்பவத்தில் 5 பயணிகளுக்கு இடுப்பெலும்பு நழுவி, கை கால் உடைந்தது. மற்றவர்கள் சொற்ப காயங்களுக்கு இலக்காகினர். இதனையடுத்து காய மடைந்த அனைத் துப் பயணிகளும் ஈப்போ ராஜா பெர்மை சூரி பைனூன் மருத்துவம னைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் பணிக் குழுவினர் தெரி வித்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்