கேங் 24 என்ற குண்டர் கும்பலைச் சேர்ந்த 24 பேர் இங்குள்ள பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இதில் ஒருவர் கேங் 24 என்ற டி சட்டையினை பிடிவாதமாக அணிந்திருந்தார். இந்த குண்டர் கும்பலின் பெரும்புள்ளி 55 வயது டத்தோ ஸ்ரீ இங் சியான் சியா கடந்த மாதம் பினாங்கில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் கைது செய்யப்பட்டார்.இவருக்கு பக்கபலமாக இரண்டாவது நிலையில் இருந்த 32 வயது டத்தோ ஓங் தெக் வோ துன் டாக்டர் லிம் சோங் இயூவின் விரைவுச் சாலையில் இவரின் மெய்க் காப்பா ளரால் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்டார். திங்கட்கிழமையன்று இந்த குண்டர் கும்பல் மீது நீதிமன்றத் தில் குற்றஞ்சாட்டப்பட்டது. கேங் 24 கும்பலின் முது கெலு ம்பை போலீசார் வெற்றிக ரமாக முறியடித்துள்ளனர். பினாங்கு குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் மூத்த உதவிக் கமிஷனர் இவ்விவரங்களை தெரி வித்தார். இந்த குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டர் கும்பல் நடவடிக்கையில் தீவிர மாக ஈடு பட்டு வந்தனர். பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள் ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் ஒன்பது பேர் தலை மறை வாகி உள்ளனர். இவர் களை இப்போது நாங்கள் வலை போட்டு தேடி வருகிறோம் விை ரவில் இவர்கள் பிடிபடு வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்