பினாங்கு மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப் பொருளுக்கு எதிராக நடத்தப்பட்ட திடீர் சோதனையில் 29 பெண்கள் உட்பட 138 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனம் நடத்திய இச்சோதனையில் 22 வயது முதல் 55 வயதிற்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையின் போது தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் களமிறங்கினர். ரேலாவ், பூலாவ் தீக்குஸ் ஆகிய இரு பகுதிகளில் சோதனை நடத்தப் பட்டதாக அதன் உயர் அமலாக்க அதிகாரி நஸ்ருடின் அப்துல் ரஹ்மான் கூறினார். ஓப்ஸ் கொஞ்சாங் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் வழி மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத் தப்படும் என்றார். இதற்கிடையே கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப் பிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்