இங்கு ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவ மனையின் ஏழாவது தளத்திலிருந்து குதித்து ஷனினா முகமட் ஸுஹாய்ரி எனும் 21 வயது மாது மரணமுற்ற தாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சம் சாங் கியோங் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக் கிழமை பிற் பகல் 3.10க்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் குற்ற அம்சம் ஏது மில்லை என்பது தொடக்கப் புலனாய்வில் தெரியவந்துள்ளது. அப்பெண் முன்பு ஹாஸ் பிட்டல் பஹாகியா உலு கிந்தா வில் ஒரு நோயாளியாவார். முன்னதாக எட்டாவது தளத் திற்கு சென்று கையால் சைகை காண்பித்துக் கொண்டு சுற்றித் திரிந்துள்ளார். பிறகு அங்கிருந்து ஏழாவது தளம் வந்து அங்கிருந்து குதித்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது என்றார் ஏசிபி. கடந்த சில மாதங்களாக உணர்ச்சி கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஷனினா பாரம்பரிய சிகிச்சைக்காக இந் தோனேசியா சென்று கடந்த செவ் வாய்க்கிழமை மலேசியா வந்தார். மனநல பிரச்சினைக்காக சிகிச்சைப் பெற்று வந்த அவர் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக மருத்துவர் கூறி யதையடுத்து தற்போது மருந்து ஏதும் சாப்பிடவில்லை. ஆறு மாதத்திற்கு முன் ஷனினாவுக்கு திருமணம் நடந்தது என ஷனினாவின் மூத்த சகோதரி ஷாஹிரா (வயது 23) கூறியுள்ளார்.-எப்எம்டி
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்