தாமான் போலி டெக்னிக் கேங் ஃபேண்டி என்னும் கார் திருட்டுக் கும்பல் விற்ற கெலிசா காரை வெ. 300க்கு வாங்கிய முகமட் பிர்டா வுஸ் ஹமிட் அல்லது பேபி மோக் 19 என்பவரை விசாரணை யின் பொருட்டு போர்ட் டிக்சன் காவல்துறை தேடி வருவதாக தலைமை காவல் அதிகாரி சூப்ரிடெண்ட் அட்ஜில் அபு ஷா தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத் தில் கேங் ஃபேண்டி யைச் சேர்ந்த நால்வரைக் கைது செய்ததன் வழி இந்தப் பகுதியில் நிகழ்ந்து வந்த கார் திருட்டுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏறக்குறைய 24 வயதிலிருந்து 26 வயது வரையில் உட்பட்ட அந்த ஆடவர்கள் 19 கார் திருட்டுத் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் ரவாங்கிலிருந்து வந்த இவர்கள் கடந்த 1 மாதமாக இந்தத் திருட்டுச் சம் பவங் களை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கும்பலிடமிருந்து வெ.300க்கு கெலிசா காரை வாங்கிய மேலே குறிப்பிட்ட நபரை விசாரணையின் பொருட்டு காவல்நிலையத்திற்கு வருமாறும் அரைப் பற்றிய விவரமறிந்த பொது மக்கள் 017- 4220322 என்ற எண் ணில் விசாரணை அதிகாரி இன்ஸ் பெக்டர் அக்மாலைத் தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள் ளப்படுகிறார்கள்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்