அரசாங்கத்தினால் உருவாக் கப்படும் சட்டவிதிகள் உட்பட போலீஸ் படையினர் பொறுப் பேற்று வரும் காவல் நிலையங் களில் தண்டனைக்கு உட்படுத் தப்படும் நபர்கள் மீதான விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத் தரப்பினரிடையே கண்டிப்பான நேர்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில மந்திரிபுசார் டத்தோ ஸ்ரீ அஸ்மின் முகமட் அலி கூறினார். நேற்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கூட்ட ணிக் கட்சித் தலைவர்களுடன் சம்பந்தப்பட்ட குடும்பஇல் லத் திற்கு வருகை மேற்கொண்டபின் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்நாட்டில் சம்பந்தப் பட்ட போலீஸ் காவலின்போது ஏற்படும் மரண சம்பவங்கள் தொடர்பில் பெரும்பாலான இந்திய சமுதாயத்தினர் மரணமடைந் துள்ளதாகத் தெரிகிறது. இது ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடிப் படையிலான விவகார மாகக் கருதப்பட்ட போதிலும், இது போன்று ஏற்படும் திடீர் மரணங்களால் அக்குடும்பத்திற்கும் அவர்களைச் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் பெரும் அச்சத் தையும் குழப்பத் தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே, மேற்படி பாலமுருகனின் மரண சம்பவம் தொடர்பில் அரசாங்க சார்பற்ற சுதந்திர மான விசாரணைக் குழு ஒன்று அவசியம் தேவை என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே, கல்வி பயின்று வரும் மரண மடைந்த பாலமுருகனின் பிள்ளைகள், எந்தத் தடங் கலுமின்றி தொடர்ந்து கல்வி பயில்வதற்கான அனைத்து உதவிகளையும் மாநில அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்