இருவேறு தருணங்களில் ஆரம்பப் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்திய குற்றச் சாட்டின் பேரில் ஆரம்பப் பள் ளியைச் சேர்ந்த உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் ஒருவருக்கு இங்குள்ள செலாயாங் செஷ ன்ஸ் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டன. கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி11 வயதாக இருந்த அந்தச் சிறு மியை, 38 வயதுடைய முகமட் எஷ்லி அஸ்ரம் என்ற அந்த ஆசிரியர் தன்னுடைய இல்லத் தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத் தியுள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதே வீட்டில் மீண்டும் அந்த சிறுமியை பாலியல் பலாத் காரத்திற்கு உள்ளாக்கியதாக அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டின் பேரில் 12 ஆண்டுச் சிறையும் ஆறு பிரம் படிகளும் கொடுக்க நீதிபதி தஸ் னிம் அபு பக்கார் உத்தர விட்டார். ஆசிரியருக்கு எதிரான இந்த வழக்கில், நியாயமான சந் தேகங்களை ஏற்படுத்த எதிர்த்தரப்பு தவறிவிட்டது என்று நீதிபதி தெரிவித்தார். இதனிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையைத் தற்காலிகமாக நீதிமன்றம் ஒத்திவைத்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு கருணை காட்டும்படி அவரது வழக்கறிஞர் விடுத்த கோரி க்கை பற்றி கருத்து ரைத்த நீதிபதி தஸ்னிம், ஓர் ஆசிரியர் என்ற முறையில் ஒரு மாண வியை பாதுகாக்க வேண்டுமே தவிர இது போன்ற அடாத காரியத்தைப் புரிந்திருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்