img
img

தடுப்புக் காவல் மரணங்களுக்கு முடிவே இல்லையா?
வெள்ளி 17 பிப்ரவரி 2017 12:08:25

img

நாட்டில் தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்வது தொடர்பில் கலந்து பேசுவதற்கு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியைச் சந்திக்க ஜனநாயக செயல்கட்சி (ஜசெக) விரும்புகிறது. ஆகக் கடைசியாக தடுப்புக் காவலில் இருந்த எஸ்.பால முருகன் (வயது 44) கடந்த வாரம் உயிரிழந்தார். இந்நிலையில் ஜசெக மூத்த தலைவரும் கேலாங்பாத்தா தொகுதி மக்களவை உறுப்பினருமான லிம் கிட் சியாங் நேற்று பால முருகன் குடும்பத்தினரை சென்று கண்டார். அப்போது தடுப்புக் காவலில் மரணம் நிகழ்வதை முடிவு கட்டும் வகையிலான தீர்வைக் கண்டறிய உள்துறையமைச்சர் ஜாஹிட்டுடனான சந்திப்பிற்கு வேண்டுகோள் விடுப்பேன் என்றார் லிம். தடுப்புக் காவல் மரணம் மூர்க்கத்தனமானது. ஈராயிரத்தாம் ஆண்டு முதல் 243 பேர் போலீஸ் தடுப்புக் காவலில் மரணமடைந்துள்ளனர். அவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் உடனடியாகத் தடுக்க வேண்டும். நாம் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். யாரையும் தடுப்புக் காவலில் மரணமடையும் வகையில் நடத்த இயலாது. இவ்விஷயத்தில் தொடர் நடவடிக்கையை மேற்கொள்வேன். நிச்சயம் நீதி கிடைக்கும் என பாலமுருகனின் குடும்பத்தாருக்கு அவர் உறுதியளித்துள்ளார். தடுப்புக் காவலில் மரணமுற்றோருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க என்ன மாதிரியான நடவடிக்கை தேவை என நாடாளுமன்ற மூத்த உறுப்பினரான லிம் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காருக்கு கேள்வி விடுத்துள்ளார். தடுப்புக் காவல் மரணச் சம்பவங்களை புலனாய்வு செய்ய அரச விசாரணை ஆணையம் அமைக்க 2004இல் அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி பரிந்துரைத்தார். அது தொடர்பில் போலீஸ் இதுநாள் வரை அமைதியாக உள்ளது.தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் தொடர்பில் மலேசிய மனித உரிமை ஆணையம், சுஹாகாம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img