img
img

போலி மருத்துவச் சான்றிதழ்!
வியாழன் 16 பிப்ரவரி 2017 13:35:59

img

ஓட்டுநர்களுக்கு போலி மருத்துவ சான்றிதழ்களை வழங் கியதற்காக ஏழு மருத்துவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஓட்டுநர்கள் தங்களின் லைசென்சை புதுப்பிப்பதற்காக மருத்துவர்களிடமிருந்து போலி சான்றிதழ் பெற்றுள்ளனர். குளுகோர், பத்து பெரிங்கி, புக்கிட் மெர்தாஜம், செபராங் பிறை ஆகிய இடங்களில் ஆக மொத்தம் ஏழு கிளினிக்குகளில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யம் அதிரடி பரிசோதனை மேற்கொண்டபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆணையத்தின் குழு ஒன்று கிளினிக்குகளில் செவ்வாய்க் கிழமை மூன்று மணியிலிருந்து பரிசோதனை நடத் தியதாக பினாங்கு மாநில மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ அப்துல் அஜிஸ் அமான் தெரிவித்தார். அனைத்து ஓட்டுநர்களுக்கும் குறிப்பாக பேருந்து டாக்சி ஓட்டு நர்களுக்கும் உடல் ஆரோக்கிய தகுதி சான் றிதழை மருத்துவ பரிசோதனை இல்லாமல் மருத் துவர்கள் வழங்கியுள்ளார்கள் என்று தெரிய வருகிறது. மாநில இயக்குநர் டத்தோ அப்துல் அஸிஸ் இவ்வாறு செய்தியாளர் களிடம் தெரிவித்தார். இந்த கிளினிக்குகள் பெரும் பாலும் நான்கு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை செயல் பட்டு வருவதாக அவர் தெரிவித் தார். ஏழு மருத்துவர்களை தடுத்து வைக்கும் உத்தரவுக்கு மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணை யம் விண்ணப்பித்துள்ளது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img