தன் கைப்பையை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற ஆடவரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற மாது கட்டுப்பாட்டை இழந்து விளக்கு கம்பத்தை மோதி மாண்டார்.காலை 8.15 மணியளவில் கம்போங் பாக் எலோங் கில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சித்தி ரோஹைனி வஹாப் (வயது 54) உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட மாது கம்போங் தெலொங்கிலிருந்து கிளந்தான் மலாயா பல்கலைக்கழகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவர் அங்குள்ள காபேவில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். வேலை இடத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவர் அவரின் கைப்பையை கொள்ளையிட்டு சென்றுள்ளார். இவரும் பயமின்றி அந்த நபரை துரத்திச் சென்றுள்ளார். வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திய அவர், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலுள்ள விளக்கு கம்பத்தை மோதியுள்ளார்.இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ரத்த கசிவு அதிகமாக இருந்ததால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கிளந்தான் மாநில போலீஸ் படையின் துணைத் தலைவர் டின் அகமட் தெரிவித்தார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்