பாலமுருகனின் தடுப்புக் காவல் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 8இல் காவல்துறை தடுப்புக் காவலில் பாலமுருகன் இறந்து கிடந்தார். இருதய நோய் காரணமாக பாலமுருகன் மரணமுற்றார் என்று முதலாவது பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. கிள்ளான் மருத்துவமனையிலிருந்து பிரேதம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.இரண்டாவது பரிசோதனை வேண்டும் என்று கோரி பாலமுருகனின் இளைய சகோதரர் பால்ராஜ் விண்ணப்பம் செய்திருந்தார். இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்கு நீதிபதி அஸ்மான் உசேன் அனுமதித்தார். பால்ராஜுவின் விண்ணப்பத்திற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் பக்கிஷா அபு பக்கார் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.தன் சகோதரர் இருதய நோய் காரணமாக மரணமுற்றார் என்று முதலாவது பிரேதப் பரிசோதனையின் முடிவுகளை தனது குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வதாக இல்லை என பால்ராஜ் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் சகோதரர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும்போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டார் என்று என் சகோதரருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள இதர இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் எங்களின் வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். சுஹாகாம் என்ற மனித உரிமை ஆணையமும் அமலாக்க அமைப்பு உயர்நெறி ஆணையமும் பாலமுருகனின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்