சிரமப்படும் குடும்பங்களுக்கு தமது சமூகநலப் பிரிவின் கீழ் மனிதநேய உதவிகளை செய்து வரும் எகோன் சேவ் ராஜா ஊடா கிளை நிர்வாகம், பட்டர்வொர்த் அம்பாங் ஜாஜார் அடுக்குமாடி குடியிருப்பில் சிரமப்படும் இந்தி யக் குடும்பத்துக்கு உதவிகளை வழங்கியது. தமது 18ஆவது வயதில் சாலை விபத்தில் காலை இழந்துவிட்ட சங்கர் த/பெ வேலுசாமி (வயது 36) வேலை ஏதும் செய்ய முடியா மல் வீட்டில் இருந்து வருகிறார். இவரின் மனைவி தேவநாயகி த/பெ வேலாயுதம் (வயது 35) தனியார் பாலர் பள்ளி ஒன்றில் சிற்றுண்டிச் சாலை உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதிலிருந்து 7 மாதம் வரையிலான 5 பிள்ளை கள் உள்ளனர். இக்குடும்பத்தின் பரிதாப நிலையை கேட்டறிந்த எகோன் சேவ் நிர்வாகத்தினர் உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள், மின் விசிறி, வீட்டிற் கான உபயோகப் பொருட்கள் என ஆயிரம் வெள்ளி மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்