ஜொகூர் ம.இ.கா., கேலாங் பாத்தா தொகுதியுடன் இணைந்து இங்கு தாமான் முத்தியாரா ரினி ஊத்தான் பண்டாரில் ஏற்பாடு செய்திருந்த ஒற்றுமை பொங்கல் விழாவில் ஒரு அங்கமாக கேலாங் பாத்தா அழகு ராணிப் போட்டியும் நடைபெற்ற வேளையி?ல் போட்டியில் நிஷாந்தினி வெற்றிச் செல்வம் கேலாங் பாத்தா அழகு ராணியாக வாகை சூடப்பட்டார். மொத்தம் 19 பெண்கள் போட்டியில் பங்கு கொண்டதாக தெரிவித்த தொகுதி மகளிர் பிரிவின் தலைவி திருமதி இந்திரா வடிவேலு போட்டியில் இரண்டாவதாக சித்தி பாத்திமா அபுபாக்காரும் மூன்றாவதாக கோகிலா ராமனும் வாகை சூடியதாகவும் தெரிவித்தார். போட்டியில் வென்றவர்களுக்கு ரொக்கம் உட்பட கவர்ச்சியான பரிசுகளும் வழங்கப்பட்டதாக தெரிவித்த ஜொகூர் ம.இ.கா. மகளிர் துணைத் தலைவியுமான இந்திரா வடிவேலு சிறந்த நீதிபதிகளைக் கொண்டு அழகு ராணிகளை தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த அழகு ராணிப் போட்டிக்கு அதிக வரவேற்பு கிட்டியதால் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் போட்டி தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே கேலாங் பாத்தா அழகு ராணியாக வாகை சூடிய நிஷாந்தினி வெற்றிச் செல்வத்திற்கு தொகுதி தலைவர் எஸ்.கண்ணனின் துணைவியார் திருமதி கௌசல்யாவும் திருமதி இந்திரா வடிவேலுவும் மகுடம் சூட்டி கௌரவித்தனர்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்