img
img

மரம் விழுந்ததில் இந்திய பெண்மணி மரணம்!
திங்கள் 13 பிப்ரவரி 2017 14:10:44

img

சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்த பொட்டானிக் கார்டன்ஸ் எனப் படும் பூ மலையில் நேற்று முன்தினம் மாலை 4.25 மணிக்கு தெம்புசு எனும் மரம் விழுந்ததில் இந்தியப் பெண்மணி ஒருவர் மரணமடைந்த அதே வேளையில் மேலும் நால்வர் காயமடைந்தனர். 38 வயதுடைய இந்திய பிரஜையான அப்பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவர் மரணமடைந்ததை தேசிய பூங்கா வாரியம் இரவு 8.32 மணிக்கு உறுதிப்படுத்தியது. இந்திய நாட்டு பெண்மணியின் 39 வயது பிரான்ஸ் நாட்டு கணவர் அவர்களின் இரு குழந்தைகள், 26 வயதுடைய சிங்கப்பூர் பெண் மணி ஒருவரும் அச்சம்பவத்தில் காயமடைந்தனர். சுமார் 270 ஆண்டுகளுக்கு மேலான அந்த தெம்புசு மரத்தை ஆகக் கடைசியாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பரிசோதித்ததில் ஆரோக்கியமாக இருந்ததாக தேசிய பூங்கா தெரிவித்தது. 6.5 மீட்டர் சுற்றளவு கொண்ட அந்த மரம் விழுந்த இடத்தின் சுற்றளவில் செம்பனை மரங்கள் இருந்தன. கனடா தூதரகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போது அந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்த மற்றவர்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதே தற்போது தங்களின் முதல் கடமை என தேசிய பூங்காவின் தலைமை நிர்வாக அதிகாரி கென்னர் எர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img