img
img

செல்வா போலீசுடன் ஒத்துழைப்பார்!
புதன் 08 பிப்ரவரி 2017 14:34:18

img
பாலியல் குற்றங்களுக்காகவும் வேறு பல குற்றங்களுக்காகவும் கனடாவில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு மலேசியா திரும்பிய எஸ். செல்வகுமார் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். செல்வா போகுமிடங்கள் குறித்து தகவல் தெரிவித்து போலீஸ் அவரைக் கண்காணிப்பதற்கு உதவுவார் என்றாரவர். செல்வா, செய்த குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து விட்டார் என்பதால் அவருக்கு எதிராக எந்தச் சட்டத்தையும் பயன்படுத்த முடியாது என்று கூறிய காலிட், அவர் சுதந்திரமாக நடமாடலாம் என்றார். “கிள்ளான் பள்ளத்தாக்கில் இருக்க அவர் முடிவு செய்துள்ளார். தம் நடமாட்டம் குறித்து தெரிவித்து போலீசுடன் ஒத்துழைக்கத் தயாராக உள்ளார். “பொதுமக்களுக்குக் கவலை வேண்டாம்”, என்று போலீஸ் தலைவர் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா கூறியது. 56-வயதான செல்வா நேற்று நாடு திரும்பினார். அவர் தீவகற்ப மலேசியாவில் தடையின்றி சுதந்திரமாக நடமாடலாம். ஆனால், சாபா, சரவாக் செல்ல முடியாது. தனிக் குடிநுழைவுச் சட்டங்களைக் கொண்டுள்ள அவ்விரு மாநிலங்களும் அவருக்குத் தடை விதித்துள்ளன.
பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img