img
img

பேரா மாநில இந்தியர்களுக்கான மானியத்தின் செயல்பாடுகள் என்ன?
திங்கள் 06 பிப்ரவரி 2017 15:37:53

img

பேரா மாநிலம் தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் வந்ததைத் தொடர்ந்து மந்திரி புசாராகத் தலைமையேற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர், பேரா மாநில இந்தியர்களின் நலன் களுக்காக முதல் முறையாக இரண்டு வகையான மானியங்களை அறிவித்தார். இது மாநில வரவு செலவு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. இதனை மலேசிய நண்பன் குழு வரவேற்கும் அதே சமயம், மாநில இந்தியர்களின் பிள்ளைகள் இதன் வழி நன்மை அடைந்துள்ளனரா என்ற கேள்வி பேரா மாநில இந்தியர்களிடையே எதிரொலித்திருப்பதை நண்பன் குழுவிற்கு கிடைத்துள்ள தொலைபேசி அழைப்புகளின் வழி உணர முடிகின்றது. பேரா மாநில இந்தியர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி கீழ்க்கண்ட திட்டங்களை அறிவித்திருந்தார்: * வெ.10 லட்சம் (வெ.1 மில்லியன்) மதிப்பிலான நிதியை பேரா இந்தியர்களுக்கான சிறப்பு கல்வி நிதியாக ஒதுக்கீடு செய்திருந்தார்; * அதே வேளையில் பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் 134 தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான நிதியாக வெ.500,000- ஐயும் ஒதுக்கீடு செய்திருந்த தகவலை பேரா மாநில ஆண்டு வரவு செலவு திட்டத்தின் வழி அறிய முடிகின்றது. மலேசிய நண்பன் குழுவினை தொடர்பு கொண்டவர்கள் மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முழுமையான விவரங்கள் பேரா மாநில இந்தியர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். அவர்கள் எழுப்பிய சில கேள்விகளை இங்கே முன் வைக்கின்றோம். * வெ. 1 மில்லியன் மானியத்தின் வழி பயன்பெற்றிருக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? * வெ. 1 மில்லியன் வழி எவ்வகையில் பயன்பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்? * ஆண்டுதோறும் மாநில அரசாங்கம் நடத்திவரும் யூபிஎஸ்ஆர் சாதனை விழாவிற்கான மானியம் இந்த நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளதா? * பேரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிலையம் ஒன்றிற்கு மானிய ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதா? * பேரா மாநில இடைநிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்ட ‘சக்தி பகுதி’ எனும் திட்டத்திற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதா? போன்ற கேள்விகளுக்கு பேரா மாநில மஇகாவின் தொடர்புக் குழுத் தலைவராகச் செயல்படுபவர் முழுமையான விவரங்களைத் தர வேண்டும் என பேரா மாநில இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர். பேரா மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் இந்தியர்களின் நலன் கருதி பத்திரிகைச் சந்திப்புகளையே நடத்தியதில்லை எனவும் தெரிவித்தனர். பேரா மாநில இந்தியர்களின் எதிர்பார்ப்பை மஇகாவின் தொடர்புக்குழுத் தலைவர் நிறைவு செய்வாரா?

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img