img
img

பத்தாங் காலி சுற்றுப்பகுதிகளில்
வெள்ளி 16 டிசம்பர் 2022 15:52:32

img

உலு சிலாங்கூர், டிச. 17-

பத்தாங் காலியில் நேற்று அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி அனைத்து வகை வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நாசுதியன் இஸ்மாயில் கூறினார்.

அதே சமயம், அம்முகாம் தளங்கள் சட்டபூர்வமாக செயல்படுகின்றனவா என்பதும் சோதனையிடப்படும் என பாதிக்கப்பட்ட பகுதிக்கு வருகை மேற்கொண்டிருந்த சமயம் அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனிடையே, சம்பந்தப்பட்ட கோ தோங் ஜெயா பகுதியில் முகாமிட்டிருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதி செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர்,

அங்கு முகாமிட்டிருந்தவர்கள் 94 பேர் என்பதை பதிவு காட்டினாலும் அது சரியானதாக இல்லாதிருக்கலாம். காரணம், ஒரு குடும்பத்தில் மூவர் அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் சார்பாக ஒருவர் மட்டும் பெயரை பதிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு நிலவரத்தில், நிலச்சரிவிற்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் அடிப்படை வசதிகள், விவசாயக் குழுவின் தலைவர் இஸாம் ஹாஷிம் தெரிவித்தார்.  

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
2023ஆம் ஆண்டு பட்ஜெட் பி.டி.பி.டி.என். கடன் பட்டவர்களுக்கான அனுகூலங்கள்

நிதிப் பிரச்சினை காரணமாக எந்தவொரு மாணவரும் உயர்கல்வி நிலையத்தில் இயலாத

மேலும்
img
பிரதான சந்தை தளத்தை அடிப்படையாகக் கொண்ட DXN HOLDINGS

2023ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதியன்று Bursa Malaysia Securities

மேலும்
img
யுபியு இணையத்தள வழியிலான பல்கலைக்கழகத்தில் நுழைவு விண்ணப்பங்கள்

உயர்கல்வி இலாகாவின் மாணவர் பல்கலைக்கழக நுழைவு

மேலும்
img
கவர்ச்சிகரமான அதிர்ஷ்டக்குலுக்கல் திட்டம்

2023 எஸ்எஸ்பிஎன் கல்வி சேமிப்பு கவர்ச்சிகரமான பரிசுகள் உண்டு

மேலும்
img
Simpan SSPN சேமிப்புத் திட்டத்தின் மூலம்

8,000 வெள்ளி வரையிலான வரிவிலக்குச் சலுகை பி.டி.பி.டி.என். 25ஆம் ஆண்டு சிறப்புக்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img