கோலாலம்பூர், அக். 31-
மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் (யு.கே.எம்.) அடுத்த மாதம் 50 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறவிருப்பதை முன்னிட்டு ஆடைகள் சம்பந்தமான சில விதிமுறைகளை அது வெளியிட்டுள்ள நிலையில், இந்திய மாணவிகள் சேலை அணிவதற்கு தடை செய்யப்பட்டிருந்தது. எனினும், இதற்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவிக்கப்பட்டது நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பல்கலைக்கழகத்தின் முத்திரையுடன், ஆடைகளுக்கான விதிமுறை குறித்து அது வெளியிட்டிருந்த ஒரு சுற்றறிக்கை சமூக வலைத்தளத்தில் வலம் வந்தது. அப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களும், வருகையாளர்களும் அணிந்து வரக்கூடிய ஏற்புடைய ஆடைகள் இவைதாம் என்பதைக் காட்டும் படங்களும் அதில் காணப்பட்டன.
அணியக்கூடாத ஆடைகளில் இந்தியர்களின் பாரம்பரிய உடையான சேலையும் சீனப் பெண்கள் அணியக்கூடிய சியோங்சாம் உடையும் இடம்பெற்றிருந்தன. அப்பல்கலைக்கழகத்தின் இச்செயலுக்கு சமூக வலைத்தளத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, இந்த எதிர்ப்பினை தொடர்ந்து யு.கே.எம். ஆடை விதிமுறைகள் தொடர்பான அறிக்கையை அதன் இணையத்தள அகப்பக்கத்திலிருந்து நீக்கியிருப்பதாக அறியப்படுகிறது.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்