img
img

மக்களுக்கு சுமை தரும் 2.50 % வட்டி விகிதம் இனியும் பணிக்குழு ஏன்?
வியாழன் 15 செப்டம்பர் 2022 15:47:52

img

கோலாலம்பூர், செப். 10


பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத ஒரு பணிக்குழு எதற்காக? அதை உடனடியாக கலைத்து விடுங்கள் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங்  நேற்று குறிப்பிட்டார்.

ஓபிஆர் என்ற உடனடி வட்டி விகிதம் 2.50 விழுக்காடாக  உயரும் என்று பேங்க் நெகாரா அறிவித்துள்ள நிலையில் இப்படி ஒரு பணிக்குழு  செயலற்றது, தேவையற்றது, ஆற்றல் இல்லாதது என்பது தெரிந்து விட்டது  என்றார் அவர்.
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த ஓபிஆர் வட்டி விகிதம் அமல்படுத்தப்படுவதாக பேங்க் நெகாரா கூறுகிறது. அமைச்சர் அனுவார் மூசா தலைமையிலான இந்த பணிக்குழு இனி எதற்காக?

பண வீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று  அனுவார் மூசா தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு குறிப்பாக கடன் பெற்றுள்ள அடித்தட்டு மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்துகின்ற மத்திய வங்கியின்  இந்த கடன் விகிதத்தை அவர்களால் தடுக்க முடியவில்லையே என்றார் அவர். இதோடு 3 முறை இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. வட்டி விகிதத்தை மத்திய வங்கி உயர்த்தியிருப்பதன் மூலம் அனுவார் மூசாவின் அறிக்கையை அது புறந்தள்ளியிருக்கிறது என்றே அர்த்தமாகிறது.

கடந்த ஜூன் மாதம் 3.4 விழுக்காடாக இருந்த பயனீட்டாளர்களுக்கான பொருள் விலைகள் ஜூலை மாதத்தில் 4.4 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. அப்படி என்றால் விலைவாசிகளை கட்டுப்படுத்தவும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த பணிக்குழு என்ன செய்கிறது. பண வீக்கத்திற்கு எதிராக ஒரு ஜிகாத் புனிதப் போரை தொடக்க இந்த குழு செயல்படும் என்று அனுவார் மூசா வீரவசனம் பேசியிருந்தார். ஆனால் அப்படி ஒன்று நடக்காத போது இப்படி ஒரு குழுவை கலைத்து விடுவதே நல்லது என்றார் அவர்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அமைத்த பணிக்குழுவில் அனுவார் மூசா தலைவராகவும் நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல், உணவுத் துறை அமைச்சர் ரோனால்ட் கேண்டி, உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் துறை அமைச்சர் அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.  

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img