img
img

புரூணை சுல்தானை சந்தித்தார் இஸ்மாயில் சப்ரி ராணுவ மரியாதை நல்கப்பட்டது
புதன் 16 பிப்ரவரி 2022 19:19:16

img

பண்டார் ஸ்ரீ பகவான், பிப். 16-

இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று முன்தினம்இரவு புரூணை தலைநகர் பண்டார் ஸ்ரீ பகவான் சென்றடைந்தார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 9ஆவது பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் புரூணைக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பண்டார் ஸ்ரீ பகவான் அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த சப்ரிக்கு அங்கு ராணுவ மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 10.45 மணியளவில் இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் அவர் புரூணை ஆட்சியாளர் சுல்தான் ஹஸ்னால் போல்கியாவை சந்தித்தார்.

அப்போது சப்ரியின் துணைவியார் டத்தின்ஸ்ரீ முஹாய்னி, வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா, கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ ஷஹிடான் காசிம், புரூணைக்கான மலேசியத் தூதர் டத்தோ ராஜா ரெஸா ஆகியோர் உடனிருந்தனர்.

அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதன் பிறகு புரூணை ஆட்சியாளர் வழங்கிய அரச விருந்துபசரிப்பில் பிரதமரும் மலேசிய பேராளர்களும் கலந்து கொண்டனர்.

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img