சென்னை, ஜன. 19- ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழகத்தில் நான்காவது நாளாக போராட்டம் வெடித்துள்ளது. சீறும் காளையர்களாக லட்சக்கணக்கான மாணவர் சக்தி ஒன்று திரண்டுள்ளது. ஆதாயம் தேட வந்த நடிகர்களும் அரசியல்வாதிகளும் ஓட, ஓட விரட்டி அடிக்கப்பட்டனர். கடுங்குளிரிலும் கட்டுக்கடங்காத போராட்டம், போர் களமாக மாறியிருப்பதால் போலீசாரால் சமாளிக்க முடியாமல் திணறுகிறது தமிழகம். இன்னும் இரண்டு நாட்களில் பதில் தெரியாவிட்டால் குடியரசு தினம் கருப்பு தினமாக மாறும். ஆதார் அட்டை திருப்பி ஒப்படைக்கப்படும் என்று மாணவர்கள் எச்சரித்து இருப்பது தமிழக அரசை தலைக்குனிய வைத்துள்ளது. *குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்- ஆதார் அட்டையை ஒப்படைப்போம்- மாணவர்கள் எச்சரிக்கை! *வரலாறு படைக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்- களம் குதித்த லட்சக்கணக்கான கல்லூரி மாணவர்கள்! *தமிழக இளைஞர்களின் வரலாறு காணாத பேரெழுச்சி...தமிழக அரசே! வேடிக்கை பார்ப்பது வெட்கமில்லையா? *மெரினா கடற்கரையில் கொந்தளிக்கும் லட்சம் மாணவர்கள் - போக்குவரத்து ஸ்தம்பிப்பு! *ஜல்லிக்கட்டு.. அமைதியாக போராடிய சென்னை மாணவர்கள் மீது போலீஸ் தடியடி- போர்க்களமானது ஓ.எம்.ஆர் சாலை *அலை கடலென அணி அணியாய் பொங்கும் மாணவர் கூட்டம் - கொந்தளிக்கும் மெரினா போராட்டம் *டிவி பார்த்துட்டு இருக்க முடியல. அதான் கௌம்பி வந்துட்டோம்! - அலங்காநல்லூர் போராட்டத்தில் பெண்கள்
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்