img
img

சொக்சோ நடத்துகின்ற வேலை வாய்ப்பு கருத்தரங்கு
திங்கள் 30 ஆகஸ்ட் 2021 12:37:19

img

 

கோலாலம்பூர், ஆக. 28-

 

கோவிட்-19 தொற்று காரணமாக பெரும் பாதிப்புக்கு இலக்கான தொழிலாளர் துறையை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக 2021ஆம் ஆண்டு அனைத்துலக பொது வேலை வாய்ப்பு கருத்தரங்கை நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று சமூக பாதுகாப்பு வாரியமான சொக்சோ அறிவித்திருக்கிறது.

 

இந்தத் தொற்றுப்பரவல் காரணமாக தொழிலாளர் துறை முடங்கியது. மக்களின் வாழ்க்கை முறையும் பாதிக்கப்பட்டது. அவற்றிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவற்றின் ஒரு கட்டமாக 3 கருத்தரங்குகள் நடத்தப்படும். செம்டம்பர் 6 தொடங்கி 7 ஆம் தேதி வரையில் சொக்சோ வாரியத்தின் வட்டார தொழில் துறைக்கு திரும்புகின்ற ஒரு கருத்தரங்கு நடத்தப்படும். செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி வரையில் அனைத்துலக பொது வேலை வாய்ப்பு சேவை கருத்தரங்கு நடைபெறும்.

 

செப்டம்பர் 7 தொடங்கி 9ஆம் தேதி வரையில் தொழிலாளர் நலன் கருத்தரங்கு நடைபெறும். இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. கல்விமான்கள், தொழில் நிபுணர்கள், முதலாளிகள், பட்டதாரிகள்,  பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், வேலை தேடுபவர்கள் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் www.perkeso.gov.my/ipef என்ற அகப்பக்கத்தில் பதிந்து கொள்ளலாம்.

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img