தங்களின் அந்தரங்க தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டதாக கூறி ஊழல் தடுப்பு ஆணையத்தின் மீதும் அதன் தலைவர் லத்திஃபா கோயா மீதும் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்தார் முன்னாள் பிரதமர் நஜீப்.
நஜீப்பும் அவரின் மனைவியும் பேசும் உரையாடல்கள் உட்பட மொத்தம் 9 உரையாடல்களை கொண்ட ஒலிநாடாக்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே.
1எம்டிபி ஊழலை மூடி மறைக்க இந்த உரையாடல் நடந்திருக்கிறது என்று லத்திஃபா கூறியிருந்தார். இது தொடர்பில் நஜீப் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருப்பதை அவர்களின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
தற்போதைக்கு இது ஒரு தலைப்பட்ச வழக்கு என்பதால் இதுபற்றிய முழுவிவரங்களை தம்மால் வழங்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
பிரதமராக இருந்த நஜீப் அவரின் மனைவி ரோஸ்மா, முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையர் ஸுல்கிப்ளி அமாட் மற்றும் அபுதாபி இளவரசர், பாலிங் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் ஆகியோரும் பேசுகின்ற உரையாடல்களைக் கொண்ட அந்த ஒலிநாடாக்களை லத்திஃபா கோயா வெளியிட்டார்.
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்