img
img

மாணவர்களின் பதிவு குறைகிறது: தோட்டப்புறத் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து?
திங்கள் 23 டிசம்பர் 2019 08:35:38

img

நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே சமயம், 2020 இல் தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் பலரிடையே நிலவுகிறது.

குறிப்பாக, தோட்டப்புறங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து வரலாம் என்னும் அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மலேசிய நண்பன் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது.

பேராவிலுள்ள பெரும்பாலான தோட்டப்புறப் தமிழ்ப் பள்ளிகளில் எதிர்வரும் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் பதிவு திருப்தியளிக்கும் வகையில் இல்லை என தெரிய வருகிறது.

வரும் 27 ஆம் தேதி முதல் பள்ளிகளில் முதலாம் ஆண்டிற்கான மறுபதிவுகள் நடந்த பிறகே உண்மையான மாணவர் எண்ணிக்கையை அறிய முடியும் என்றாலும் இதுவரை நடந்துள்ள பதிவுகள் மிகவும் கவலையளிக்கும் நிலையிலேயே உள்ளன.

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 9 தோட்டப்புறப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் எண்ணிக்கை மிகவும் சரிவு கண்டுள்ளதாகத் தெரிகிறது.

கிளாப்பாபாலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இதுவரை முதலாம் ஆண்டுக்கு ஒரு மாணவர் கூட பதிவு செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

 அருகிலுள்ள பேராங் ரிவர் மற்றும் குளுனி தோட்டத் தமிழ்ப் பள்ளிகளில் ஒரேயொரு மாணவர் மட்டுமே பதிந்துள்ளது எதிர்காலத்தில் தமிழ்ப் பள்ளிகளின் நிலை குறித்து மிகவும் சிந்திக்க வைக்கிறது.

அப்பள்ளிகளைத் தவிர்த்து துரோலாக், சுங்கை குரூட், தொங் வா, செண்டிரியாங், சுங்கை தோட்டம், பீக்கம் தோட்டப் பள்ளிகளில் நான்கு அல்லது ஐந்து மாணவர்கள்  மட்டுமே பதிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.

தஞ்சோங் மாலிம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், சிலிம் ரிவர், சிலிம் வில்லேஜ், சுங்கை, பீடோர், தாப்பா, தாப்பாரோடு போன்ற பட்டணப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை திருப்தியளிக்கும் வகையில் இருந்தாலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் சரிவு கண்டுள்ளதாகவே அறிய வருகிறது.

பெரும்பாலான பட்டணப் பள்ளிகளில் பாலர் பள்ளிகள் இருப்பதால் 20 லிருந்து 35, 40 மாணவர்கள் வரை  பதிவு செய்துள்ளனர். இந்திய சமூகத்தினரின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாலும் இன்னமும் ஒரு சிலர் பிறமொழிப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் பதிவு செய்வதாலும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் பதிவு குறைந்து வருகிறது எனலாம்.

பேரா மாநிலத்தில் மொத்தம் 134 தேசிய வகை தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றுள்: பத்தாங் பாடாங் மாவட்டத்தில் 12 தமிழ்ப்பள்ளிகளும் மஞ்சோங் மாவட்டத்தில் 15 தமிழ்ப்பள்ளிகள், கிந்தா (17), கெரியான் (14), கோலகங்சார் (12), ஹிலிர் பேரா (12), லாருட் மாத்தாங், செலாமா (17), உலு பேரா (3), பேரா தெங்கா (3), கம்பார் (6), முவாலிம் (7) மற்றும் பாகான் டத்தோ மாவட்டத்தில் 16 தமிழ்ப்பள்ளிகளும் அடங்கும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img